Wednesday, June 15, 2022

💫நவகிரகம் தோஷம் போக்கும் மயிலாப்பூர்💫


 மயிலாப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.

கபாலீஸ்வரர் கோயிலின் அருகே ஆறு பழமையான, அறியப்படாத சிவாலயங்கள் அமைந்துள்ளது. மொத்தம் இந்த ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும். 

இந்த 7 சிவாலயங்களுக்கு நவக்கிரகங்களோடு தொடர்புள்ளது. இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப்போல் அமைந்துள்ளது. 

அதுமட்டுமின்றி சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இந்த 7 ஆலயங்களாகும். இவைகள்  அனைத்தும் மயிலாப்பூர் சுற்று வட்டாரத்தில்  இருப்பதால் ஒரே நாளில் தரிசனம் செய்ய இயலும்.

அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்தால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் நமக்கு கிடைக்கும்.
 
ஏழு ஆலயங்களுமே 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என வரலாறு கூறுகின்றது. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இக்கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றும் வழிபடும் மரபு உள்ளது. 

1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்  (சூரியன் ஸ்தலம்)

மயிலை கடைவீதியில் இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில்  உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். 

விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இவ்விடம் விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகும். பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. 

சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு சுவாமி தரிசனம் செய்து  இறைவன் திருவுளப்படி நடராஜத் தாண்டவம் ஆடி அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக திகழ்கின்றது.  

2. இரண்டாவது கோயில் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் (சந்திரன் ஸ்தலம்)

மயிலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனால் ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. 

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இந்த ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். பண்டைக் காலங்களில் 64 வகையான தீர்த்தக்குளங்கள்  இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்த்த குளங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகும். 

மாசி மாதத்தில் ஏழு  சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காணும் முன்பாகவே இந்தக் கோயிலில் இருக்கும் தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின்  இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது என்பது ஐதீகம்.

3. மூன்றாவது கோயில் ஸ்ரீ வாலீஸ்வரர் (செவ்வாய் ஸ்தலம்):

'மயிலாப்பூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். 

இங்கு மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு வாலீஸ்வரர். 
இக்கோயில் 2000 வருடங்களுக்கும் முன்பானது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது. 

ராமாயணக் காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இத்தலத்தின் இறைவனை வழிபட்டுத்தான் பல்வேறு  வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். 

நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இக்கோயிலின் பிரத்தியேகமாகும். ஸ்ரீ ராமரும் இந்த தலத்தின் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

4. நான்காவது கோயில்ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்:

காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் (மயிலாப்பூர் கடைவீதி) அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். 

மல்லிகை செடிகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு  கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்துள்ளது.

அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலமாகும். மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகும். இக்கோயில் இறைவனை புதன் கிழமைகளில் வழிபட்டால்  புத கிரக தோஷங்கள் விலகும். 

5. ஐந்தாவது கோயில் ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்):

இக்கோயில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரை  சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் இணையும் இடத்தில் உள்ளது. இக்கோயில் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயிலும்  அமைந்துள்ளது. 

12-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் பிற்கால சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கூறப்படுறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இக்கோயிலின் இறைவனுக்கு  ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற பெயர் உண்டு. 

இக்கோயிலின் ஈசன் நவக்கிரகங்களான தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் விளங்குகிறார். வியாழக்கிழமைகளில் இவர்களை வணங்கி வரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். 

6.ஆறாவது கோயில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்):

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் இந்த வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக உள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம். மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு 3 அடி  நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்துவிட்டார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழியில்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக்கொண்டார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை இழந்து போகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் வரலாறு. ஆகவே ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும். இங்குள்ள  சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

7.ஏழாவது கோயில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்):

மயிலாப்பூர் சப்த சிவதலங்களில் அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டார். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி உள்ளார். ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளிள்ள இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்த கோயிலுக்கு மயிலாப்பூர் எனப்பட்டது.  

நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.  
எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இந்த தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக உள்ளார். அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். 

ஒவ்வொரு வருடமும் பங்குனி பெருவிழாவில் 8ம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில். 

இந்த தலத்தை சனி கிழமைகளில் வணங்கி வந்தால்  ஆயுள்  தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும். 

மேலும் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.
 
8. எட்டாவது கோயில் அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள்.
 கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணமுடியும்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு  புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது.

மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

9.ஒன்பதாவது கோயில் அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்):

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். 

காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம்.  புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

10.பத்தாவது கோயில் அருள்மிகு அப்பர் சுவாமி:

மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணி தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளார்கள். ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது. ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம்.

சைவ அடியார்களுள் ஒருவரான  ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பின்னர் அதனை திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். 
ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள்  பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது

தாமிரபரணி கரையோர நவகைலாய சிவாலயங்கள் பற்றி அறிவோம்.

 தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.


பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.

பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு.

நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார்.

அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன.

1. பாபநாசம்:
முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம்.


2. சேரன்மகாதேவி:
இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் -ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம்.

3. கோடகநல்லூர்:
மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய்பகவான் அம்சம் கொண்ட தலம்.

4. குன்னத்தூர்:
நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. ராகுபகவான் அம்சம் கொண்ட தலம்.

5. முறப்பநாடு:
ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம்.

6. ஸ்ரீவைகுண்டம்:
ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம்.

7. தென்திருப்பேரை:
ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம்.

8. ராஜபதி:
எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம்.

9. சேர்ந்தபூமங்கலம்:
ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம்.

ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!

Friday, May 20, 2022

அதிகாரத்தின் 48 விதிகள் (The 48 Laws Of Power)

  1. உனக்கு மேலிருப்பவன் போட்ட கோட்டை தாண்டாதே.
  2. நண்பர்களை நம்பாதே; இந்நாள் நண்பனைவிட முன்னாள் எதிரி களத்தில் அதிகம் பயன்படுவான்
  3. உன் நோக்கத்தை மறை. ஒரு பாதையில் போவதுபோல சைகை காட்டி, மறு பாதையில் பயணம் செய்.
  4. தேவைக்கும் குறைவாக பேசு.
  5. உண்மையை விட உனது பிம்பமே பெரியது. உயிர் கொடுத்தாவது அதை காப்பாற்று. எதிரிகளின் பிம்பங்களை உடைத்தெறி.
  6. எந்நேரமும், அனைவர் கவனமும் உன்னிடமே இருக்கட்டும். நீ கூட்டத்தில் தனித்து தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்.
  7. தேவையான வேலைகளை மற்றவர்கள் முடிக்கட்டும். பெயரை நீ தட்டிச்செல்.
  8. யாரையும் தேடிப்போகாதே. அவர்கள் உன்னை தேடி வரட்டும். அவர்களுக்கு உதவு; பிறகு பலியாக்கு
  9. செயலில்தான் வெற்றிவேண்டும். வாக்குவாதத்தில் அல்ல.
  10. அதிர்ஷ்டம் கெட்டவர்கள், சோர்வானவர்களை சேர்த்துக்கொள்ளாதே. உனது தரப்பிலிருந்து வெளியேற்றி விடு.
  11. உன்னை சுற்றியிருப்பவர்களை "உன்னை அண்டி இருந்தால்தான் வாழ்க்கை" என்ற நிலையிலேயே வைத்திரு.
  12. குறைவான நேர்மை, அளவான கருணை - உன் பலிக்கடாவுக்கு இதுவே போதும். அதிக அன்புடன் நடந்து கொள்ளாதே.
  13. எப்பொழுதும் மக்களின் தேவை பூர்த்தி அடைவதைப் பற்றியே பேசு. உனது தேவை அதாகவே பூர்த்தியடையும்
  14. மற்றவர்களிடம் நண்பனை போல தோற்றம் கொள்; ஆனால் ஒற்றனை போல் பின் தொடர்.
  15. எதிரியை பூண்டோடு அழி. தீயில் மிச்சம், மீதி எதுவும் வைக்காதே
  16. அவ்வப்போது கண் மறைவாய் இருந்துகொள். தேட விடு. மக்களிடையே மதிப்பு கூடும்.
  17. மக்களை ஒரு நிலைத்த பயத்தில் வை. யாரும் யூகிக்க முடியாதபடி நடந்து கொள்.
  18. பாதுகாப்பு என்றெண்ணி உன்னை சுற்றி கோட்டையை எழுப்பிவிடாதே. தனிமைப்பட்டால் உனக்குத்தான் ஆபத்து
  19. பலவீனமானவர்களை பதம் பார். உறுதியானவர்களிடம் உரசிக் கொள்ளாதே
  20. இருதரப்பையும் மோதவிடு. எந்த தரப்புக்கும் உண்மையாக இருக்காதே.
  21. உன்னை விட புத்திசாலியாக இருப்பதாக உன் பலிகடாவை நினைக்க விடு. உன் நோக்கத்தை காட்டாதே.
  22. உனது பலவீனமான தருணத்தில் சரணடை. பின் அந்த சரணையே வெற்றியாக திரித்துக் காட்டு. பலவீனத்தை பலமாக மாற்றி காட்சிப்படுத்து.
  23. ஒரு மாபெரும் பிரச்சனையை மையபுள்ளியாக உருவகப்படுத்து. அதைச் சுற்றி உன் வியூகத்தை அமைத்துக்கொள்.
  24. அதிகார சபையில் அகட விகடம் பண்ணு. மந்திரிகளில் தந்திரியாக இரு.
  25. உன் பிம்பத்தை நீயே உருவாக்கு. மக்கள் விரும்பும் பாவனைகளை உனது கைகள் செய்யட்டும். அதைப்பார்த்து உன் பிம்பத்தை அவர்கள் நம்பிவிடுவார்கள்.
  26. உன் கரங்கள் கறையில்லாமல் இருக்கட்டும். தவறுகள் செய்ய தனி அணியை அமைத்துக் கொள் .
  27. ஒரு மூட நம்பிக்கையை உருவாக்கி மக்களிடம் கொடு. பின்னர் அதை சுற்றி வார்த்தைகளால் ஜாலம் காட்டிக்கொண்டே இரு.
  28. அதிரடியாக காரியம் செய். தவறில் முடிந்து விட்டதா? மேலும் அழிச்சாட்டியமாக நடந்து கொள். தைரியசாலியென்று மக்கள் பிரமிப்பார்கள்.
  29. ஒரு காரியம் ஆரம்பிக்கும் போது, அதன் முடிவு வரை உன் திட்டம் இருக்கவேண்டும்.
  30. உன் சாதனைகளை எளிதில் அடைந்ததைப்போல காட்டிக்கொள். பட்ட வேதனைகளை மக்களிடம் மறைத்து விடு.
  31. உன் பலிக்கடாக்களுக்கு பல சோதனைகளை கொடுத்து விளையாடு. வேதனைகளில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையிலேயே அவர்கள் இருக்கட்டும்.
  32. மக்கள் கூட்டத்துக்கு உண்மை கசக்கும்; பொய் இனிக்கும். அவர்களுக்கு கற்பனைகளை அள்ளிவீசு. கெட்டியாக பிடித்துக்கொள்ளுவார்கள்.
  33. எதிரி, நண்பன் - இருவரின் வெளியில் தெரியாத குறைகளை மறைவாக கண்டுபிடி. தேவைப்படும்போது அவர்களுக்கெதிராக உபயோகப்படுத்து.
  34. மன்னனை போல தோற்றம் கொள். பாவனை பண்ணு., உடையணி. மகுடம் ஏந்து. மக்கள் உன்னை மன்னனாகவே ஏற்றுக்கொள்ளுவார்கள்.
  35. பொறுமை காத்துக்கொள். தருணம் பார். சரியான சமயத்தில் நொறுக்கியடி.
  36. உன் தவறினை மறை. எதிரியை மதியாதே.
  37. பெரிய சைகைகள், மேடை பாவனைகள், மயக்கும் கற்பனைகள் - மக்கள் இதையெல்லாம் உன் சக்தியின் பிரகாசமாக நம்புவார்கள்.
  38. பொது ஜனத்தின் மனசாட்சியைப் போலவே பேசு; நடி. ஆனால் உன் மனம் போல செயல்படு .
  39. அமைதி காத்துக்கொள். ஆனால் எதிரியை கலவரப்படுத்து. குட்டையை குழப்பு. மேலே வரும் மீனை பிடி
  40. பணத்தை சுழற்றி அடி. நீ செலவழிப்பதெல்லாம் உன்னிடத்தில் அதிகாரத்தை ஈர்த்து வரும் காந்தமாக இருக்கும்.
  41. ஒரு மாமனிதனுக்கு பிறகு நீ பதவியேற்க நேர்ந்ததா. அவன் பிம்பத்தை சீரழித்து விடு. உன் பிம்பத்தை அதைவிட பெரிதாக்கு.
  42. எதிரி கூட்டத்தில் வல்லவனை கண்டுபிடி. ஒழித்துக்கட்டு. செம்மறியாட்டு கூட்டம் போல எதிரிகள் சிதறி ஓடட்டும்.
  43. மக்கள் கூட்டத்துக்கு பிடித்த ஒரு விஷயத்தை கண்டுபிடி. தொடர்ந்து அதையே பேசு.
  44. எதிரிகள் செயலை முகம் பார்க்கும் கண்ணாடி போல் அப்பிடியே பிரதிபலித்து நடந்துகொள். அவர்கள் குழம்பி போய் தவறு இழைக்க ஆரம்பித்து விடுவார்கள்
  45. அதிரடி சீர்திருத்தங்கள் மக்களை உனக்கெதிரான புரட்சியில் தள்ளி விட்டு விடும். எந்த நேரமும் மாறுதல்களையும், முன்னேற்றத்தையும் பற்றியே பேசு. ஆனால் எதையும் கொஞ்சமாக செய்தால் போதும்.
  46. உனது சிறு தவறுகள் குறித்து பொதுவெளியில் வருந்து. அனுதாபம் தேடு. பெருந்தவறுகளை மக்கள் கண்ணில் காட்டாதே.
  47. உன் நோக்கத்தின் எல்லையை குறித்து வைத்துக்கொள். வெற்றிக்கோட்டை தாண்டி போகாதே. எங்கே நிற்க வேண்டும் என்று தெரிந்து அங்கேயே நில்.
  48. எதிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதே. குடுவைக்கேற்ற தண்ணீர் போல இடத்திற்கேற்றார் போல மாறிக்கொண்டே இரு.

வாழ்க்கைல எது சந்தோஷம்?

  வாழ்க்கைல எது  சந்தோஷம்?


நீங்கலாம் சந்தோஷமாவா இருக்கீங்க?

இந்த சமுதாயம் சொல்லிகுடுற மாறி

வாழ்ந்தா சந்தோஷமா வாழ முடியுமா?

அப்டி என்ன சொல்லி குடுக்குது இந்த சமுதாயம்?


பொய் சொல்லாத,

தப்பு பண்ணாத,

எதுவும் கேள்வி கேக்காத,

எல்லா பாரத்தையும் கடவுள்

மேல இறக்கி வை.


இதெல்லாத்தையும் ப்பாலோவ் பண்ணா…..


பண்ணா நம்ம சந்தோஷமா வாழ முடியுமா?


இந்த சமூகத்துல நம்ம சந்தோஷமா

வாழனும்ணா இந்த விதிகள் மட்டும் பாலோவ்

பண்னா மட்டும் பாத்தது..


அதைவிட முக்கியமா

ஒரு பொறுப்பு இருக்கு. ஒரு குடும்பம்,

2 கொழந்தைங்க, ஒரு அழகிய குடும்பம்,

மாச சம்பளத்துக்கு ஒரு வேலை,

3 வேள சாப்பாடு.. ஒரு சொந்த வீடு,

ஒரு சாதரண டிவி,

அதுவாங்கியாச்சினா

ஒரு எல்சிடி,

அதுவும் வாங்கியாச்சினா

ஒரு எல்இடி,

அதுவும் வாங்கியாச்சினா

பத்தாததுக்கு ஒரு ஹோம் தியேட்டர்..


முடிஞ்சா ஒரு கார்..

முடிஞ்சா அத விட

பெரிய கார் அதுவும் வந்துருச்சின்னா வீட்ல

மூனு கார் .........

பசங்களுக்கு ஒரு

ஸ்கூல் கண்டிப்பா அரசு பள்ளில சேக்க

கூடாது...ஒரு பிரைவெட் ஸ்கூல்.. கண்டிப்பா

இங்கிலீஸ் மீடியம் .. "டிஏவி" ஓ "டான் போஸ்கோ" ஓ..



ஒரு வாரத்துல பீச்,

இல்லைனா ஹோட்டல்,

இல்லைனா ஷாப்பிங் மால்,

இல்லேனா ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனும், நல்ல தியேட்டர்ல.

அங்க போனா 120 ரூவா…..

என்ன ____படம்

எடுக்குரானுங்க??? ..


ஒரு குடும்பம் 1000 ரூவா செலவு பண்ணி ஒரு படத்துக்கு போனா, அந்த படத்துல எதாவது இருக்கணும்ல??

ஒரு மண்னாங்கட்டியும் இருக்காது.

ஆனா நீ அந்த

படத்த பாத்துதான் ஆகணும்..

ஏன்னா அதுதான் விதி..

இத தவிர்த்து தேவப்படும்

போதெல்லாம் ஆடை, செருப்பு, துணிமணி....

நீ எவ்ளோ வேணா வாங்கலாம் வாங்கலாம்னுலாம்

கெடையாது வாங்கிதான் ஆகணும்..


நீ என்ன வாங்கனுனு உக்காந்து யோசிக்கலாம் தேவை இல்ல


உன்ன சுத்தி நீ நின்னாலோ, நடந்தாலோ, பஸ் க்கு வெயிட் பண்னாலோ, எங்க திரும்பினாலோ, டிவி, ரேடியோ, பேப்பர், இன்டர்நெட், மொபைல், ரோடு .. ரோடு முழுக்க கடை... கடை முழுக்க விளம்பரம்.. விளம்பரம் முழுக்க தள்ளுபடி, சலுகை,...சேல் சேல் சேல்... முந்துங்கள் முந்துங்கள் முந்துங்கள்....


ஆடி ஆஃபர் ல ஆடி போவிங்க ஆடி. ..


இங்க ஒரெ ரூல் தான்... பணம்.


இந்த சமூகம் என்ன சொல்லுது??


நீ பணக்காரனா இருந்தா உன்ன மதிப்பேன்


இல்லேனா உன்ன மதிக்கமாட்டேன்.. சிம்பிள்.

நீ எங்க வேணா வேல செய், எவன வேணா

சொரண்டி தின்னு, காக்கபிடி, அடிமையா

இரு, ஊழல் பண்ணு, லஞ்சம் வாங்கு, குத்து,

அடி, மெரட்டு, கொல பண்ணு, ரேப் பண்ணு,

எத்தன பேர் வயித்துல வேணா மிதி..,

எத்தன பேரனாலும் முட்டாள் ஆக்கு...,

பல்லயிரக்கணக்கான இலட்சக்கணக்கான

கொடிக்கணக்கான பணத்த வேணா கொள்ள அடி

யாரும் தூங்கி போட்டு மிதிக்க மாட்டாங்க.


இந்த சமூகத்துல ஒரே ஒரு விதி தான்,

நீ பணம் சம்பாதிச்சா இந்த சமுதாயம்

உன்ன மதிக்கும். இல்லேனா மதிக்காது....சிம்பிள்..


உனக்கு ஒரு சொந்த வீடு

இல்லேனா உன் கூட பிரச்சனை வரும். உன்

சொந்தக்காரங்க உன்ன மதிக்கமாட்டாங்க.

அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி யாரும் உன்ன மதிக்கமாட்டாங்க.

உன் பொண்ணுக்கு பையன் குடுக்க மாட்டாங்க ..

பையனுக்கு பொண்ணு குடுக்க மாட்டாங்க


நான் எங்க போய் சம்பாதிக்கிறது?..

நான் யாருக்காக பணம் சம்பாதிக்கனும்? ..


18 உடை, சொந்த வீடு, 4 கார்,

மினரல் வாட்டர்,..

120ரூவாய்கு ஒரு குப்ப படம் எனக்கு

தேவகிடையாது.. அப்பொ அதெல்லாம்

யாரோட தேவ..எங்கையோ இருக்கற நாலு

மொதலாளி .. அவன நக்கி தின்ற

இங்க இருக்கற 4000 மொதலாளிங்க

உலகத்ல இருக்கற அத்தன பணக்கார

பன்னிகளும் கொழுத்து போறதுக்கு தேவ ஒரு

பெரிய மார்க்கெட்..


அந்த மார்க்கெட் தான் இந்தியா..


இங்க நம்ம டிவி ல 100 தடவ ஒரு விளம்பரம் போட்டானா அவன் சோப்ப நீ வாங்கித்தான் ஆகணும்.

வேற வழியே கெடையாது..

தெனம் தெனம் ஒழைச்சி ஒழைச்சி.. ஆச பட்டு ஆசப்பட்டு . தேவயில்லாத குப்பையெல்லாம் வாங்கி எதுக்கு வாங்கினோம்கிறதே மறந்துபோய் அடுத்தநாள் காலைல எந்திரிச்சி ஒழச்சி கொட்டனும்..அப்பதான் ஒலகத்துல இருக்குர அத்தன பணகாரங்களும் சந்தோஷமா இருப்பாங்க..

அவங்கள சந்தோஷமா வச்சிக்க தான் கடவுள் உன்ன படச்சிருக்காரு..

இது எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு இந்த சமூகம் சொல்லிகுடுக்குற மாதிரி உன் தேவ எல்லாத்தையும் பூர்த்தி பண்ணிட்டேஏஏஏஏ செத்துப்போனாத்தான் அது ஒரு குடும்பம்... அப்பதான் இந்த சமூகம் அந்த குடும்பத்த ஏத்துக்கும்...

உன்ன இந்த சமுதாயம் ஏத்துக்கும்..


இது எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாதான் இந்த சமூகத்துல....

என்ன சொல்றது? ..ஆம்... சந்தோஷமா வாழ முடியும்....



Tuesday, October 14, 2014

NSE BSE Stocks Trading in F&O

Nifty Bank Nifty BSE Midcap Symbol Mkt Lot Symbol Mkt Lot Symbol Mkt Lot
ACC Axis Bank Axis Bank AB Nuvo BANKNIFTY 25 SIEMENS 500 NTPC 2000
Ambuja Cements Bank of Baroda Bajaj Auto Allahabad Bank DJIA 25 SRTRANSFIN 500 ORIENTBANK 2000
Asian Paints Bank of India Bharti Airtel Andhra Bank CNXIT 50 SUNPHARMA 500 PETRONET 2000
Axis Bank Canara Bank BHEL Apollo Tyres FTSE100 50 WIPRO 500 PFC 2000
Bajaj Auto Federal Bank Cipla Arvind NIFTY 50 INDIAVIX 750 RCOM 2000
Bank of Baroda HDFC Bank Coal India Ashok Leyland CNXPSE 75 BHARATFORG 1000 RECLTD 2000
Bharti Airtel ICICI Bank Dr Reddys Labs Aurobindo Pharm CNXINFRA 100 BHARTIARTL 1000 SSLT 2000
BHEL IndusInd Bank GAIL Bank of India BAJAJ-AUTO 125 BIOCON 1000 TATACOMM 2000
BPCL Kotak Mahindra HDFC Bata India DRREDDY 125 BPCL 1000 TATAGLOBAL 2000
Cairn India PNB HDFC Bank Bharat Forge GRASIM 125 CAIRN 1000 TATAMTRDVR 2000
Cipla SBI Hero Motocorp Biocon GSKCONS 125 CANBK 1000 UNIONBANK 2000
Coal India Yes Bank Hindalco Canara Bank HEROMOTOCO 125 CENTURYTEX 1000 UPL 2000
DLF   HUL CESC INFY 125 CESC 1000 ALBK 4000
Dr Reddys Labs   ICICI Bank Crompton Greave MCDOWELL-N 125 COALINDIA 1000 ANDHRABANK 4000
GAIL   Infosys Divis Labs MRF 125 GAIL 1000 APOLLOTYRE 4000
Grasim   ITC GMR Infra OFSS 125 GODREJIND 1000 ARVIND 4000
HCL Tech   Larsen Godrej Ind SBIN 125 IGL 1000 CROMPGREAV 4000
HDFC   M&M Havells India TCS 125 INDUSINDBK 1000 FEDERALBNK 4000
HDFC Bank   Maruti Suzuki Hind Zinc ULTRACEMCO 125 IOC 1000 IBREALEST 4000
Hero Motocorp   NTPC HPCL NFTYMCAP50 150 ITC 1000 IDBI 4000
Hindalco   ONGC IDBI Bank ABIRLANUVO 250 JINDALSTEL 1000 IDFC 4000
HUL   Reliance IFCI ACC 250 M&MFIN 1000 IRB 4000
ICICI Bank   SBI IGL APOLLOHOSP 250 MCLEODRUSS 1000 JISLJALEQS 4000
IDFC   Sesa Sterlite India Cements AXISBANK 250 ONGC 1000 KTKBANK 4000
IndusInd Bank   Sun Pharma Jain Irrigation BATAINDIA 250 RANBAXY 1000 L&TFH 4000
Infosys   Tata Motors JSW Energy COLPAL 250 RELCAPITAL 1000 POWERGRID 4000
ITC   Tata Power Jubilant Food DIVISLAB 250 RELINFRA 1000 RPOWER 4000
Jindal Steel   Tata Steel Just Dial HCLTECH 250 SUNTV 1000 SYNDIBANK 4000
Kotak Mahindra   TCS Karnataka Bank ICICIBANK 250 TATACHEM 1000 UCOBANK 4000
Larsen   Wipro L&T Finance JUBLFOOD 250 TATAMOTORS 1000 VOLTAS 4000
Lupin     Mcleod JUSTDIAL 250 TATASTEEL 1000 TATAPOWER 4145
M&M     MRF LUPIN 250 TITAN 1000 ADANIPOWER 8000
Maruti Suzuki     NHPC M&M 250 YESBANK 1000 DISHTV 8000
NMDC     Oracle Fin Serv MARUTI 250 ZEEL 1000 HDIL 8000
NTPC     Oriental Bank RELIANCE 250 ADANIENT 2000 INDIACEM 8000
ONGC     Petronet LNG S&P500 250 ADANIPORTS 2000 IOB 8000
PNB     Power Finance TECHM 250 AMBUJACEM 2000 JPASSOCIAT 8000
Power Grid Corp     Rel Capital UBL 250 AUROPHARMA 2000 JSWENERGY 8000
Reliance     Reliance Infra ASIANPAINT 500 BANKINDIA 2000 PTC 8000
SBI     Reliance Power BANKBARODA 500 BHEL 2000 SAIL 8000
Sesa Sterlite     SAIL CIPLA 500 DABUR 2000 IFCI 10000
Sun Pharma     Siemens GLENMARK 500 DLF 2000 GMRINFRA 11000
Tata Motors     Sun TV Network HAVELLS 500 EXIDEIND 2000 NHPC 12000
Tata Power     Syndicate Bank HDFC 500 HEXAWARE 2000 UNITECH 12000
Tata Steel     Tata Chemicals HDFCBANK 500 HINDALCO 2000 JPPOWER 13000
TCS     Tata Global Bev HINDUNILVR 500 HINDPETRO 2000 ASHOKLEY 15000
Tech Mahindra     Union Bank JSWSTEEL 500 HINDZINC 2000
UltraTechCement     Unitech KOTAKBANK 500 IDEA 2000
Wipro     UPL LT 500 LICHSGFIN 2000
Zee Entertain     Voltas PNB 500 NMDC 2000

Saturday, September 20, 2014

புத்தம் புது காலை

மீண்டும் "புத்தம் புது காலை", மெறுகு எற்றப் பெற்ற காலை.

ஆம், எனக்குப் பிடித்தப் பாடல்களில் ஒன்றான "புத்தம் புது காலை",
மேகா படத்தில் மீண்டும் இசைஞானி இளையாராஜாவின் கைவண்ணத்தில்,,



"புத்தம் புது காலை" பாடல் எப்போழுதுக் கேட்டாலும் ஒர் உன்னதமான காலையின்
அனுபவத்தினைத் தருவதை உணறமுடியும்.
சன் Music HDல் மேகா படத்தில் மீண்டும் "அழகாக காட்சிப்" படுத்தப் பட்டதை
கண்டு ஆனந்தமே!!!


இளையாராஜாவின் எண்ணற்றப் பாட்ல்கள் மீண்டும் தகுந்த குறல்களில்
மெறுகேற்றப்படுமின் மீண்டும் அடுத்த ஒறுச்சுற்று இசைஞானி இளையாராஜாவின்
அற்புத இசை திரையில் கால் நூற்றாண்டுக் கோல்யோச்சும்,

இதோ என் காதுகளில் மீண்டும் மீண்டும் மீண்டும் புத்தம் புது காலை...