- உனக்கு மேலிருப்பவன் போட்ட கோட்டை தாண்டாதே.
- நண்பர்களை நம்பாதே; இந்நாள் நண்பனைவிட முன்னாள் எதிரி களத்தில் அதிகம் பயன்படுவான்
- உன் நோக்கத்தை மறை. ஒரு பாதையில் போவதுபோல சைகை காட்டி, மறு பாதையில் பயணம் செய்.
- தேவைக்கும் குறைவாக பேசு.
- உண்மையை விட உனது பிம்பமே பெரியது. உயிர் கொடுத்தாவது அதை காப்பாற்று. எதிரிகளின் பிம்பங்களை உடைத்தெறி.
- எந்நேரமும், அனைவர் கவனமும் உன்னிடமே இருக்கட்டும். நீ கூட்டத்தில் தனித்து தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்.
- தேவையான வேலைகளை மற்றவர்கள் முடிக்கட்டும். பெயரை நீ தட்டிச்செல்.
- யாரையும் தேடிப்போகாதே. அவர்கள் உன்னை தேடி வரட்டும். அவர்களுக்கு உதவு; பிறகு பலியாக்கு
- செயலில்தான் வெற்றிவேண்டும். வாக்குவாதத்தில் அல்ல.
- அதிர்ஷ்டம் கெட்டவர்கள், சோர்வானவர்களை சேர்த்துக்கொள்ளாதே. உனது தரப்பிலிருந்து வெளியேற்றி விடு.
- உன்னை சுற்றியிருப்பவர்களை "உன்னை அண்டி இருந்தால்தான் வாழ்க்கை" என்ற நிலையிலேயே வைத்திரு.
- குறைவான நேர்மை, அளவான கருணை - உன் பலிக்கடாவுக்கு இதுவே போதும். அதிக அன்புடன் நடந்து கொள்ளாதே.
- எப்பொழுதும் மக்களின் தேவை பூர்த்தி அடைவதைப் பற்றியே பேசு. உனது தேவை அதாகவே பூர்த்தியடையும்
- மற்றவர்களிடம் நண்பனை போல தோற்றம் கொள்; ஆனால் ஒற்றனை போல் பின் தொடர்.
- எதிரியை பூண்டோடு அழி. தீயில் மிச்சம், மீதி எதுவும் வைக்காதே
- அவ்வப்போது கண் மறைவாய் இருந்துகொள். தேட விடு. மக்களிடையே மதிப்பு கூடும்.
- மக்களை ஒரு நிலைத்த பயத்தில் வை. யாரும் யூகிக்க முடியாதபடி நடந்து கொள்.
- பாதுகாப்பு என்றெண்ணி உன்னை சுற்றி கோட்டையை எழுப்பிவிடாதே. தனிமைப்பட்டால் உனக்குத்தான் ஆபத்து
- பலவீனமானவர்களை பதம் பார். உறுதியானவர்களிடம் உரசிக் கொள்ளாதே
- இருதரப்பையும் மோதவிடு. எந்த தரப்புக்கும் உண்மையாக இருக்காதே.
- உன்னை விட புத்திசாலியாக இருப்பதாக உன் பலிகடாவை நினைக்க விடு. உன் நோக்கத்தை காட்டாதே.
- உனது பலவீனமான தருணத்தில் சரணடை. பின் அந்த சரணையே வெற்றியாக திரித்துக் காட்டு. பலவீனத்தை பலமாக மாற்றி காட்சிப்படுத்து.
- ஒரு மாபெரும் பிரச்சனையை மையபுள்ளியாக உருவகப்படுத்து. அதைச் சுற்றி உன் வியூகத்தை அமைத்துக்கொள்.
- அதிகார சபையில் அகட விகடம் பண்ணு. மந்திரிகளில் தந்திரியாக இரு.
- உன் பிம்பத்தை நீயே உருவாக்கு. மக்கள் விரும்பும் பாவனைகளை உனது கைகள் செய்யட்டும். அதைப்பார்த்து உன் பிம்பத்தை அவர்கள் நம்பிவிடுவார்கள்.
- உன் கரங்கள் கறையில்லாமல் இருக்கட்டும். தவறுகள் செய்ய தனி அணியை அமைத்துக் கொள் .
- ஒரு மூட நம்பிக்கையை உருவாக்கி மக்களிடம் கொடு. பின்னர் அதை சுற்றி வார்த்தைகளால் ஜாலம் காட்டிக்கொண்டே இரு.
- அதிரடியாக காரியம் செய். தவறில் முடிந்து விட்டதா? மேலும் அழிச்சாட்டியமாக நடந்து கொள். தைரியசாலியென்று மக்கள் பிரமிப்பார்கள்.
- ஒரு காரியம் ஆரம்பிக்கும் போது, அதன் முடிவு வரை உன் திட்டம் இருக்கவேண்டும்.
- உன் சாதனைகளை எளிதில் அடைந்ததைப்போல காட்டிக்கொள். பட்ட வேதனைகளை மக்களிடம் மறைத்து விடு.
- உன் பலிக்கடாக்களுக்கு பல சோதனைகளை கொடுத்து விளையாடு. வேதனைகளில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையிலேயே அவர்கள் இருக்கட்டும்.
- மக்கள் கூட்டத்துக்கு உண்மை கசக்கும்; பொய் இனிக்கும். அவர்களுக்கு கற்பனைகளை அள்ளிவீசு. கெட்டியாக பிடித்துக்கொள்ளுவார்கள்.
- எதிரி, நண்பன் - இருவரின் வெளியில் தெரியாத குறைகளை மறைவாக கண்டுபிடி. தேவைப்படும்போது அவர்களுக்கெதிராக உபயோகப்படுத்து.
- மன்னனை போல தோற்றம் கொள். பாவனை பண்ணு., உடையணி. மகுடம் ஏந்து. மக்கள் உன்னை மன்னனாகவே ஏற்றுக்கொள்ளுவார்கள்.
- பொறுமை காத்துக்கொள். தருணம் பார். சரியான சமயத்தில் நொறுக்கியடி.
- உன் தவறினை மறை. எதிரியை மதியாதே.
- பெரிய சைகைகள், மேடை பாவனைகள், மயக்கும் கற்பனைகள் - மக்கள் இதையெல்லாம் உன் சக்தியின் பிரகாசமாக நம்புவார்கள்.
- பொது ஜனத்தின் மனசாட்சியைப் போலவே பேசு; நடி. ஆனால் உன் மனம் போல செயல்படு .
- அமைதி காத்துக்கொள். ஆனால் எதிரியை கலவரப்படுத்து. குட்டையை குழப்பு. மேலே வரும் மீனை பிடி
- பணத்தை சுழற்றி அடி. நீ செலவழிப்பதெல்லாம் உன்னிடத்தில் அதிகாரத்தை ஈர்த்து வரும் காந்தமாக இருக்கும்.
- ஒரு மாமனிதனுக்கு பிறகு நீ பதவியேற்க நேர்ந்ததா. அவன் பிம்பத்தை சீரழித்து விடு. உன் பிம்பத்தை அதைவிட பெரிதாக்கு.
- எதிரி கூட்டத்தில் வல்லவனை கண்டுபிடி. ஒழித்துக்கட்டு. செம்மறியாட்டு கூட்டம் போல எதிரிகள் சிதறி ஓடட்டும்.
- மக்கள் கூட்டத்துக்கு பிடித்த ஒரு விஷயத்தை கண்டுபிடி. தொடர்ந்து அதையே பேசு.
- எதிரிகள் செயலை முகம் பார்க்கும் கண்ணாடி போல் அப்பிடியே பிரதிபலித்து நடந்துகொள். அவர்கள் குழம்பி போய் தவறு இழைக்க ஆரம்பித்து விடுவார்கள்
- அதிரடி சீர்திருத்தங்கள் மக்களை உனக்கெதிரான புரட்சியில் தள்ளி விட்டு விடும். எந்த நேரமும் மாறுதல்களையும், முன்னேற்றத்தையும் பற்றியே பேசு. ஆனால் எதையும் கொஞ்சமாக செய்தால் போதும்.
- உனது சிறு தவறுகள் குறித்து பொதுவெளியில் வருந்து. அனுதாபம் தேடு. பெருந்தவறுகளை மக்கள் கண்ணில் காட்டாதே.
- உன் நோக்கத்தின் எல்லையை குறித்து வைத்துக்கொள். வெற்றிக்கோட்டை தாண்டி போகாதே. எங்கே நிற்க வேண்டும் என்று தெரிந்து அங்கேயே நில்.
- எதிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதே. குடுவைக்கேற்ற தண்ணீர் போல இடத்திற்கேற்றார் போல மாறிக்கொண்டே இரு.
Chintadripet ('originally Chinna Thari Pettai) (Tamil: சிந்தாதிரிப்பேட்டை) (சின்ன தறி பேட்டை) is a locality in Chennai, in India. Located on the southern banks of the Cooum River, it is a residential-cum-commercial area surrounded by Chepauk, Island Grounds, Pudupet, Egmore and Anna Salai.
Friday, May 20, 2022
அதிகாரத்தின் 48 விதிகள் (The 48 Laws Of Power)
வாழ்க்கைல எது சந்தோஷம்?
வாழ்க்கைல எது சந்தோஷம்?
நீங்கலாம் சந்தோஷமாவா இருக்கீங்க?
இந்த சமுதாயம் சொல்லிகுடுற மாறி
வாழ்ந்தா சந்தோஷமா வாழ முடியுமா?
அப்டி என்ன சொல்லி குடுக்குது இந்த சமுதாயம்?
பொய் சொல்லாத,
தப்பு பண்ணாத,
எதுவும் கேள்வி கேக்காத,
எல்லா பாரத்தையும் கடவுள்
மேல இறக்கி வை.
இதெல்லாத்தையும் ப்பாலோவ் பண்ணா…..
பண்ணா நம்ம சந்தோஷமா வாழ முடியுமா?
இந்த சமூகத்துல நம்ம சந்தோஷமா
வாழனும்ணா இந்த விதிகள் மட்டும் பாலோவ்
பண்னா மட்டும் பாத்தது..
அதைவிட முக்கியமா
ஒரு பொறுப்பு இருக்கு. ஒரு குடும்பம்,
2 கொழந்தைங்க, ஒரு அழகிய குடும்பம்,
மாச சம்பளத்துக்கு ஒரு வேலை,
3 வேள சாப்பாடு.. ஒரு சொந்த வீடு,
ஒரு சாதரண டிவி,
அதுவாங்கியாச்சினா
ஒரு எல்சிடி,
அதுவும் வாங்கியாச்சினா
ஒரு எல்இடி,
அதுவும் வாங்கியாச்சினா
பத்தாததுக்கு ஒரு ஹோம் தியேட்டர்..
முடிஞ்சா ஒரு கார்..
முடிஞ்சா அத விட
பெரிய கார் அதுவும் வந்துருச்சின்னா வீட்ல
மூனு கார் .........
பசங்களுக்கு ஒரு
ஸ்கூல் கண்டிப்பா அரசு பள்ளில சேக்க
கூடாது...ஒரு பிரைவெட் ஸ்கூல்.. கண்டிப்பா
இங்கிலீஸ் மீடியம் .. "டிஏவி" ஓ "டான் போஸ்கோ" ஓ..
ஒரு வாரத்துல பீச்,
இல்லைனா ஹோட்டல்,
இல்லைனா ஷாப்பிங் மால்,
இல்லேனா ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனும், நல்ல தியேட்டர்ல.
அங்க போனா 120 ரூவா…..
என்ன ____படம்
எடுக்குரானுங்க??? ..
ஒரு குடும்பம் 1000 ரூவா செலவு பண்ணி ஒரு படத்துக்கு போனா, அந்த படத்துல எதாவது இருக்கணும்ல??
ஒரு மண்னாங்கட்டியும் இருக்காது.
ஆனா நீ அந்த
படத்த பாத்துதான் ஆகணும்..
ஏன்னா அதுதான் விதி..
இத தவிர்த்து தேவப்படும்
போதெல்லாம் ஆடை, செருப்பு, துணிமணி....
நீ எவ்ளோ வேணா வாங்கலாம் வாங்கலாம்னுலாம்
கெடையாது வாங்கிதான் ஆகணும்..
நீ என்ன வாங்கனுனு உக்காந்து யோசிக்கலாம் தேவை இல்ல
உன்ன சுத்தி நீ நின்னாலோ, நடந்தாலோ, பஸ் க்கு வெயிட் பண்னாலோ, எங்க திரும்பினாலோ, டிவி, ரேடியோ, பேப்பர், இன்டர்நெட், மொபைல், ரோடு .. ரோடு முழுக்க கடை... கடை முழுக்க விளம்பரம்.. விளம்பரம் முழுக்க தள்ளுபடி, சலுகை,...சேல் சேல் சேல்... முந்துங்கள் முந்துங்கள் முந்துங்கள்....
ஆடி ஆஃபர் ல ஆடி போவிங்க ஆடி. ..
இங்க ஒரெ ரூல் தான்... பணம்.
இந்த சமூகம் என்ன சொல்லுது??
நீ பணக்காரனா இருந்தா உன்ன மதிப்பேன்
இல்லேனா உன்ன மதிக்கமாட்டேன்.. சிம்பிள்.
நீ எங்க வேணா வேல செய், எவன வேணா
சொரண்டி தின்னு, காக்கபிடி, அடிமையா
இரு, ஊழல் பண்ணு, லஞ்சம் வாங்கு, குத்து,
அடி, மெரட்டு, கொல பண்ணு, ரேப் பண்ணு,
எத்தன பேர் வயித்துல வேணா மிதி..,
எத்தன பேரனாலும் முட்டாள் ஆக்கு...,
பல்லயிரக்கணக்கான இலட்சக்கணக்கான
கொடிக்கணக்கான பணத்த வேணா கொள்ள அடி
யாரும் தூங்கி போட்டு மிதிக்க மாட்டாங்க.
இந்த சமூகத்துல ஒரே ஒரு விதி தான்,
நீ பணம் சம்பாதிச்சா இந்த சமுதாயம்
உன்ன மதிக்கும். இல்லேனா மதிக்காது....சிம்பிள்..
உனக்கு ஒரு சொந்த வீடு
இல்லேனா உன் கூட பிரச்சனை வரும். உன்
சொந்தக்காரங்க உன்ன மதிக்கமாட்டாங்க.
அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி யாரும் உன்ன மதிக்கமாட்டாங்க.
உன் பொண்ணுக்கு பையன் குடுக்க மாட்டாங்க ..
பையனுக்கு பொண்ணு குடுக்க மாட்டாங்க
நான் எங்க போய் சம்பாதிக்கிறது?..
நான் யாருக்காக பணம் சம்பாதிக்கனும்? ..
18 உடை, சொந்த வீடு, 4 கார்,
மினரல் வாட்டர்,..
120ரூவாய்கு ஒரு குப்ப படம் எனக்கு
தேவகிடையாது.. அப்பொ அதெல்லாம்
யாரோட தேவ..எங்கையோ இருக்கற நாலு
மொதலாளி .. அவன நக்கி தின்ற
இங்க இருக்கற 4000 மொதலாளிங்க
உலகத்ல இருக்கற அத்தன பணக்கார
பன்னிகளும் கொழுத்து போறதுக்கு தேவ ஒரு
பெரிய மார்க்கெட்..
அந்த மார்க்கெட் தான் இந்தியா..
இங்க நம்ம டிவி ல 100 தடவ ஒரு விளம்பரம் போட்டானா அவன் சோப்ப நீ வாங்கித்தான் ஆகணும்.
வேற வழியே கெடையாது..
தெனம் தெனம் ஒழைச்சி ஒழைச்சி.. ஆச பட்டு ஆசப்பட்டு . தேவயில்லாத குப்பையெல்லாம் வாங்கி எதுக்கு வாங்கினோம்கிறதே மறந்துபோய் அடுத்தநாள் காலைல எந்திரிச்சி ஒழச்சி கொட்டனும்..அப்பதான் ஒலகத்துல இருக்குர அத்தன பணகாரங்களும் சந்தோஷமா இருப்பாங்க..
அவங்கள சந்தோஷமா வச்சிக்க தான் கடவுள் உன்ன படச்சிருக்காரு..
இது எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு இந்த சமூகம் சொல்லிகுடுக்குற மாதிரி உன் தேவ எல்லாத்தையும் பூர்த்தி பண்ணிட்டேஏஏஏஏ செத்துப்போனாத்தான் அது ஒரு குடும்பம்... அப்பதான் இந்த சமூகம் அந்த குடும்பத்த ஏத்துக்கும்...
உன்ன இந்த சமுதாயம் ஏத்துக்கும்..
இது எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாதான் இந்த சமூகத்துல....
என்ன சொல்றது? ..ஆம்... சந்தோஷமா வாழ முடியும்....